உள்ளூர் செய்திகள் (District)

பொள்ளாச்சி நகைக்கடையில் 8 பவுன் நகை திருடிய இளம்பெண்

Published On 2023-05-10 09:20 GMT   |   Update On 2023-05-10 09:20 GMT
  • கீர்த்தியை ஆகாஷ் தனது நகைக்கடையில் வேலைக்கு சேர்த்தார்.
  • இரவு 8 மணியளவில் கீர்த்தி திடீரென மாயமானார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலகோபாலபுரம் வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27).

இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது கடைக்கு கீர்த்தி (27) என்ற இளம்பெண் வேலை கேட்டு வந்தார். அவரிடம் கடையின் உரிமையாளர் அடையாள அட்டை கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அந்த இளம்பெண் நாளை தருவதாக கூறினார். இதனையடுதத்து இளம் பெண்ணை ஆகாஷ் தனது நகைக்கடையில் வேலைக்கு சேர்த்தார்.

இரவு 8 மணியளவில் கீர்த்தி திடீரென மாயமானார். அவரை கடை உரிமையாளர் தேடினார். அப்போது அவர் கடையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் ஆகாஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வேலைக்கு சேர்ந்த முதல் நாளே நகைக்கடையில் 8 பவுன் தங்க செயினை திருடி மாமாயன இளம்பெண்ைண தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News