உள்ளூர் செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-07 07:12 GMT   |   Update On 2022-07-07 07:12 GMT
  • ஊரக வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.
  • தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய செயலர் இளைய பெருமாள் தலைமையில் ஊரக வேலைத்திட்டத்தை சிதைக்காமல் செயல்ப டுத்திட கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும் எனவும். தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கு வேலைத் தளத்திற்க்கு வரச் சொல்லி கட்டபப்படுத்துவதை கைவிட வலியுறித்தியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்திட கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதே போன்று தலை ஞாயிறு ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு அலெக்சாண்டர் தலைமை யில் 80 பேர் கோரி க்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டதுடன் உடனடியாக ஒன்றிய, தமிழக அரசுகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News