உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2022-06-21 10:36 GMT   |   Update On 2022-06-21 10:36 GMT
  • ஓமலூர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
  • கடந்த 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்ெகாண்டனர்.

ஓமலூர்:

ஓமலூர் வேலசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை படித்து முடித்த முன்னாள் மாணவர்கள், அவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், 1975-76, 1976-77-ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

அவர்களில் பலரும் படித்த அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். அதேபோல பல்வேறு அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இந்தநிலையில், இவர்கள் தாங்களுக்கு பாடம் நடத்தி, தங்களை பண்புள்ளவர்களாக, அவர்களை போலவே சிறந்த ஆசிரியர்களாக மாற்றிய, அவர்களின் ஆசிரியர்களை அழைத்து வந்து மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில், பள்ளியின் நிர்வாக பணியில் இருந்தவர்களுக்கும் கல்வி போதித்த வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் சந்தன மாலை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் மரியாதை செய்தனர். மேலும் தங்களது பழைய நினைவுகளை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டனர். பின்பு ஒன்றாக உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News