உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் அமமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

Published On 2023-05-19 12:45 GMT   |   Update On 2023-05-19 12:45 GMT
  • பெரியபாளையம், பூவலம்பேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
  • தச்சூர் கூட்டுச் சாலையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

பொன்னேரி:

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தச்சூர் கூட்டுச் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.வி.சங்கர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

இதே போன்று கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம், பூவலம்பேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

சோழவரம் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, எல்லாபுரம் கிழக்கு துணைச் செயலாளர் பூவரசன், கும்மிடிப்பூண்டி மத்திய ஒன்றிய செயலாளர் தமிழ் மணி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் முனி ரத்தினம், ஆரணி பேரூராட்சி செயலாளர் தன்ராஜ், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு, மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, மீஞ்சூர் பேரூராட்சி செயலாளர் சதீஷ், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ராம்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கோடீஸ்வரன், பூண்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், வெங்கல் மணிமாறன், விவசாய அணி மாவட்ட செயலாளர் சி.என்.அன்பு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மாலதி, கழக இணைச் செயலாளர் பானுமதி, கழகத் துணைச் செயலாளர் அங்கைய்யன், நத்தம், வாசு, எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ரேகா உள்ளிட்ட  அமமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News