உள்ளூர் செய்திகள் (District)
ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் பலி
- வேலம்பட்டி பகுதியில் உள்ள பூதிநத்தம் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
- எதிர்பாராத விதமாக பாசி வழுக்கி கீழே விழுந்ததால் சின்னவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எம். தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னவன் (வயது62). இவர் வேலம்பட்டி பகுதியில் உள்ள பூதிநத்தம் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாசி வழுக்கி கீழே விழுந்ததால் சின்னவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.