உள்ளூர் செய்திகள்
பழனி பெரியாவுடையார் கோவிலில் உலக நன்மை வேண்டி அன்னாபிஷேகம்
- பழனி பெரியாவுடையார் கோவிலில், உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின் தேவாரம், திருவாசகம் பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பழனி:
பழனி பெரியாவுடையார் கோவிலில், உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பெரியாவுடையார் சன்னதி முன்பு பிரதான கலசம் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது.
அதையடுத்து சிவபெருமானுக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் சுத்த அன்னத்தால் சிவபெருமான் திருவுருவம் செய்யப்பட்டு, மஞ்சள்நிற அன்னத்தால் கிரீடம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர், திருமால், தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின் தேவாரம், திருவாசகம் பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் உபயதாரர்கள் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன், நரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.