உள்ளூர் செய்திகள்
திருநாவலூர் அருகே போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழி்ப்புணர்வு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில், உளுந்தூர்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கெடிலம் கூட்ரோட்டில் நடைபெறற இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழி்ப்புணர்வு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். இப்பேரணியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், பசவராஜ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.