உள்ளூர் செய்திகள் (District)

ஜெயங்கொண்டத்தில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2023-05-15 06:36 GMT   |   Update On 2023-05-15 06:36 GMT
  • ஜெயங்கொண்டத்தில் மது விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
  • அவர்களிடம் இருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டத்தில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் ரமேஷ் (வயது 39), சீனிவாசா நகர் சீனிவாசன் மகன் கோபி (38) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News