உள்ளூர் செய்திகள்

உடையார்பாளையத்தில் டிராக்டர் மோதி மின்கம்பம் விழுந்து வாலிபர் படுகாயம்

Published On 2023-05-28 06:51 GMT   |   Update On 2023-05-28 06:51 GMT
  • உடையார்பாளையத்தில் டிராக்டர் மோதி மின்கம்பம் விழுந்து வாலிபர் படுகாயம் அடைந்தார்
  • புகாரின் பேரில் எஸ்.ஐ. திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன் லல்லுபிரசாத் (வயது 25). இவரது தம்பி சிவராமன் (20). இவர்கள் இருவரும் உடையார்பாளையம் டீ கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம்-திருச்சி மெயின் ரோட்டில் கடலூர் மாவட்டம் புவனகிரி பு.ஆதனூர் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கரும்பு ஏற்றி ஓட்டி வந்த டிராக்டர் எதிர்பாரா விதமாக சாலை இடது புறத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

இதில் மின் கம்பம் சேதமடைந்து சிவராமன் மீது விழுந்ததில் படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் சிவராமனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லல்லுபிரசாத் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Tags:    

Similar News