உள்ளூர் செய்திகள் (District)

வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-03-30 06:24 GMT   |   Update On 2023-03-30 06:24 GMT
  • இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நடைபெற்றது
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

உடையார் பாளையம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் பரிமேலழகன் (வயது23). இவர் சொந்த வேலை காரணமாக ஜெயங்கொண்டம் வந்துவிட்டு மீண்டும் பொன்பரப்பி செல்ல புதுக்குடி ஏரி ஓடை பாலம் பிரிவு பாதை அருகே சென்று இரு சக்கர வாகனத்தில் கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த இலையூர் கண்டியங்கொல்லை வடக்கு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் இளங்கோவன் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பரிமேலழகன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாரா விதமாக மோதியது.இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பரிமேலழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News