உள்ளூர் செய்திகள் (District)

ஆண்டிமடம் அருகே கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழப்பு

Published On 2023-04-01 06:23 GMT   |   Update On 2023-04-01 06:23 GMT
ஆண்டிமடம் அருகே கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த கூவத்தூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கணேசன் (60). இவர் ஆண்டிமடம் - ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டில் கூவத்தூர் பகுதியில் சாலையைக் கடக்க முற்பட்டபோது நெய்வேலியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வேகமாக சென்ற சசிகுமார் என்பவர் ஓட்டி வந்த கார் கணேசன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார் இரண்டும் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டுநர் சசிகுமாரை கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்




Tags:    

Similar News