அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்
- அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது
- நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். நாம் தமிழர் கட்சி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் ரத்த தானம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கப்பல் குமார், தொகுதி செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் மணிவண்ணன் நகர தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் நசியாஹுசேன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவர் ரத்தங்களை சேகரித்தனர்.17 நபர்களிடமிருந்து 17 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட ரத்தம் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.