உள்ளூர் செய்திகள் (District)

அரியலூர் அருகே கொடுக்கூர் கிராமத்தில் நூல் வெளியீட்டு விழா

Published On 2023-01-29 06:39 GMT   |   Update On 2023-01-29 06:39 GMT
  • அரியலூர் அருகே கொடுக்கூர் கிராமத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
  • மனிதவள மேம்பாடு குறியீடுகளில் அரியலூர் மாவட்டம் கடைசி மாவட்டமாக உள்ளது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. கொடுக்கூர் கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், தோற்றம், மக்களின் பொருளாதார நிலைமை, பழக்க–வழக்கங் கள், வாழ்க்கை–முறை, குடும்ப கட்ட–மைப்பு என்ற ஒவ்வொரு அம்சங்களிலும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு பேராசிரியர் சண்முக–வேலாயுதம் எழுதிய கொடுக்கூர் அன்றும் இன்றும் தலைப்பிலான நூலை சென்னை வாழ்க வளமுடன் பதிப்பகம் வெளியிட்டது. விழாவுக்கு ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் சண் முகசுந்தரம் நூலை அறிமு–கம் செய்து பேசினார். லிங்கத்தடிமேடு வள்ளாலர் கல்வி நிலைய செயலர் கொ.வி.புகழேந்தி, நூலை வெளியிட்டு பேசினார். நூலாசிரியர் முனைவர் க.சண்முகவேலாயுதம் பேசுகையில், ஆரம்பகாலத் தில் புன்செய் நிலங்களாக காணப்பட்ட கொடுக்கூர் கிராமமானது இன்று முந்திரிக் காடுகளாக விருத்தியடைந்த கிராமமாக காட்சியளிக்கின்றது. கொடுக்கூர் இன்றைய நிலை, அன்றைய நிலை, மாற்றங்கள், மாற்றங்களுக்கான காரணிகள், தற்போ–தைய சவால்கள், மேம்படு–வதற்கான வாய்ப்பு–கள், பரிந்துரைகள் என்ற தலைப்புகளில் மாவட்டத்தின் ஒட்டு–மொத்த கிரா–மங்களில் நிலை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தனி நபர் வருமானம், மனிதவள மேம்பாடு குறியீடுகளில் அரியலூர் மாவட்டம் கடைசி மாவட்டமாக உள்ளது. அரியலூர் மாவட்டம் பிந்தங்கியதற்கு முக்கிய காரணம் அரசு நிர்வாகத்திற்கு இம்மா–வட்டம் பயிற்சி களமாக உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து பின்தங்கிய நிலையை ஒழிப்பதற்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் என ஒவ்வொரு துறைக்கும் ஒரு குறிப்பிட்ட உத்தியை மாவட்ட நிர்வாகமும், மாநில நிர்வாகமும் சரியான திட்டமிடல், நிதி ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு மூலம் வகுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News