உள்ளூர் செய்திகள் (District)
கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
- கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது
- மருத்துவ குழுவினர் 300 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பு ஊசி செலுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர்
அரியலூர்:
அரியலூர் அடுத்த மணக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் சங்கீதா அசோக் குமார் தொடக்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட கடுகூர் கால்நடை மருத்துவர் குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர் மாலதி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவகுழுவினர், பெரியமணக்குடி, சின்ன மணக்குடி, மணக்குடி காலனி உள்ளிட்ட பகுதியிலுள்ள 300 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பு ஊசி செலுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர். முகாம் முடிவில் மணக்குடி ஊராட்சி துணைத் தலைவர்பாப்பா பரமசிவம் நன்றி கூறினார்.