உள்ளூர் செய்திகள்

அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி

Published On 2023-02-11 08:55 GMT   |   Update On 2023-02-11 08:55 GMT
  • அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி நடைபெற்றது
  • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

அரியலூர்:

பல்வேறு கோரி க்கைகளை வலி யுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் 10 ஆண்டுகளாக பணி முடித்த சத்துணவு அமைப்பாளர்களை அமர்த்தி பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்திட வேண்டும். எம்.ஆர்.பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று முடித்துக் கொண்டனர். இந்த பேரணிக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பி.காமராஜ், மாவட்டச் செயலர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் மற்றும் தமிழ்நாடு சத்துணவு உழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கம், சாலைப் பணியாளர் சங்கம், கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்கம், செவிலியர் சங்கம், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News