உள்ளூர் செய்திகள்

தா.பழூரில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை விழா

Published On 2023-05-15 06:31 GMT   |   Update On 2023-05-15 06:31 GMT
  • தா.பழூரில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை விழா நடைபெற்றது
  • வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச புராணம், பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் அப்பர் பெருமான் குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், சமயக்குரவர்களான சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் எழுந்தருளிய விக்ரஹம் ஆகியவற்றுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவிய பொடி, நெல்லி முள்ளி பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள், சமயக்குரவர்கள் நால்வர் ஆகியோர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஓதுவார்கள் அப்பர் பெருமான் இயற்றிய தேவாரப் பாடல்களை பாடி வழிபட்டனர். வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச புராணம், பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் அடியார்களுக்கு தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News