உள்ளூர் செய்திகள் (District)

ஜெயங்கொண்டம் அருகே சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்

Published On 2023-01-07 07:34 GMT   |   Update On 2023-01-07 07:42 GMT
  • ஜெயங்கொண்டம் அருகே சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
  • மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை எப்படி பெறுவது என விளக்கி பேசினர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு மற்றும் ஜெயங்கொண்டம் சட்ட பணிகள் குழு இணைந்து நடத்தும் இலவச சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சட்ட விழிப்புணர்வு அறிக்கையில் சட்டத்தினை பற்றி அனைத்து பிரிவு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முகாமில் தலைவர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, செயலாளர் சார்பு நீதிபதி, தலைவர் சார்பு நீதிபதி, சட்ட பணிக்குழு ஜெயங்கொண்டம் நீதிபதிகள் ஆகியோர் பேசியதாவது:- சிவில் வழக்குகள் சம்பந்தமாக குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் வழக்குகளை நேரடியாக நீதிமன்ற நடைமுறையில் அல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு பெற மக்கள் நீதிமன்றம் நடுவர் அரங்கங்கள் பற்றிய விழிப்புணர்வு, மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை எப்படி பெறுவது, காசோலையில் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சரி செய்வது, குறித்தும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குறித்தும் பொதுமக்கள் அவர்களது பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பன குறித்து விளக்கி பேசினர்.


Tags:    

Similar News