உள்ளூர் செய்திகள்

அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

Published On 2023-10-16 08:51 GMT   |   Update On 2023-10-16 08:51 GMT
  • அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
  • 1237 வழக்குகளுக்கு தீர்வு

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு மாநில சட்ட பணிகள் ஆனைக்குழு வழி காட்டுதலின் பேரில் அரிய லூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்ற ங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.அரியலூர் ஒருங்கிணை ந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற த்தை மாநில சட்ட பணிகள் ஆனைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான கிரிஸ்டோபர் தலைமை யேற்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் குற்றவியல் தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி, ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜசேகர் மற்றும் நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்கள்,வக்கில் சங்க பிரதிநிதிகள் நீதிமன்ற ஊழியர்கள் கலந் துகொண்டனர்.இச்சிறப்பு மக்கள் நீதிம ன்றத்தில் 6 காசோலை வழக்கு, ஒரு குடும்பநல வழக்கு, 28 சிவில் வழக்கு, 10 மோட்டார் வாகனவிபத்து, 212 சிறுகுற்ற வழக்கு, 2 வருவாய்த்துறை வழக்கு. 12 வங்கி வழக்குகள் 966 ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்திய வழக்குகள் ஆக 1237 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News