உள்ளூர் செய்திகள் (District)

சாலையின் தடுப்பில் மோதி ெரயில்வே ஊழியர் பலி

Published On 2023-04-03 07:01 GMT   |   Update On 2023-04-03 07:01 GMT
  • பணி முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது பரிதாபம்
  • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்

உடையார்பாளையம்,

திருச்சி பொன்மலை ெரயில்வே குடியிருப்பை சேர்ந்த முருகன்(வயது39). இவர் திருச்சி பொன்மலை ெரயில்வேயில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முருகன் பணியை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து மாமனார் வீட்டுக்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம் நோக்கி அவரது இரு சக்கர வாகனத்தில் சென்றார். உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமம் அருகே சிதம்பரம் சாலையில் வரும் போது நாய் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க சாலையின் இடது புறம் திரும்பிய போது ஓரத்தில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News