உள்ளூர் செய்திகள்

திருமானூரில் தற்காலிய பேருந்து நிறுத்தம்

Published On 2023-05-20 06:46 GMT   |   Update On 2023-05-20 06:46 GMT
  • திருமானூரில் தற்காலிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது
  • சமூக ஆர்வலர்களால் அமைக்கப்பட்டது

அரியலூர்:

திருமானூரில் கடந்த சுமார் 5வருட காலமாக திருமானூர் பஸ் நிலையத்தில் அமைந்திருந்த பயணியர் நிழல்குடை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக இடிக்கப்பட்டது.மேலும் அரசு ஆரம்பசுதாரநிலையத்தின் அருகில் இருந்த பயணியர் நிழல்குடை தேசியநேடுஞ்சாலை விரிவுபடுத்தும் போது இடிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில நிர்வாகத்திற்கும் ஊராட்சி மற்றும் கிராம நிர்வாகத்திற்கும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.இதனால் பொது மக்களின் நலன் கருதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு சுகாதார நிலையம் அருகில் தற்காலிக நிழல் கூடை சமூக ஆர்வலர்களால் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு தலைவர் வரதராஜன், ராமலிங்கம், பார்த்திபன், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஆலோசகர் பாலை திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News