உள்ளூர் செய்திகள் (District)

100 அடி கிணற்றில் இளம்பெண் தவறி விழுந்து சாவு

Published On 2022-10-13 09:16 GMT   |   Update On 2022-10-13 09:16 GMT
  • 100 அடி கிணற்றில் இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்
  • பூ பறிக்க சென்றபோது விபரீதம்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் ஹெல்வினா சைனி ( வயது 18 ).

இவர் நேற்று முன்தினம் அங்குள்ள வீட்டு தோட்டத்தில் பூ மற்றும் கத்தரிக்காய் பறிக்க சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாரன்ஸ் தோட்டத்து கிணற்றில் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் மகளின் காலணி மற்றும் துப்பட்டா மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது பற்றி கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

இந்த கிணறு சுமார் 100 அடி ஆழத்தில் உள்ளது. கிணற்றின் பாதி தூரத்திற்கு கீழ் புதர் மண்டி கிடப்பதால் தீயணைப்பு துறையினர் உடனடியாக இறங்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து மணப்பாறையில் இருந்து நீருக்குள் மூழ்கும் கேமரா வரவழைக்கப்பட்டது.

பின்னர் அதனை தண்ணீரில் இறக்கி சோதித்த போது கிணற்றுக்குள் சைனி பிணமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. பூப்பறிக்க சென்றபோது அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அதன் பின்னர் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் களமிறங்கியுள்ளனர். சுமார் 31 மணி நேரத்தை கடந்தும் இளம் பெண் உடலை மீட்க தீயணைப்புத் துறையினர் பல வகைகளில் முயற்சி செய்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மேற்கண்ட பகுதியில் திரண்டனர்.

Tags:    

Similar News