உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் முன் விரோதத்தில் 2 பேர் மீது தாக்குதல்-வாலிபர் கைது

Published On 2023-05-05 09:29 GMT   |   Update On 2023-05-05 09:29 GMT
  • 2 ஊழியர்கள் ஜெப கூடத்தில் ஜன்னலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • இதுகுறித்து ஆனந்தன் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

கோவை,

கோவை பேரூர் மெயின் ரோடு தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (48). வியாபாரி. இவர் செல்வபுரம் எல்ஐசி காலனி சிஜிவி நகரில் ஜெப கூடம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று 2 ஊழியர்கள் இவரது ஜெப கூடத்தில் ஜன்னலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவர்களிடம் தகராறு செய்தார். மேலும் அங்கிருந்த லேப்டாப்பை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். தொடர்ந்து அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 2 பேரை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஊழியர்கள் செல்போன் மூலம் ஆனந்தனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், முன் விரோதம் காரணமாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் ஜெப கூடத்தில் புகுந்து ஊழியர்களை தாக்கி மிரட்டிய செட்டிபாளையம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்த கந்து வட்டி தொழில் செய்யும் சுசாந்த் (36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News