உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வெவ்வேறு விபத்தில் வங்கி மேலாளர்-வாலிபர் பலி

Published On 2023-04-07 09:09 GMT   |   Update On 2023-04-07 09:09 GMT
  • மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக வேன் மோதி உயிரிழந்தார்.
  • முகமது அஷிப் என்பவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.

கோவை,

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஜெகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் இவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரது நண்பர் ஜெகநாதனுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

மேல் சிகிச்சைக்காக ஜெகநாதனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோமங்களம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் முருகன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல திருப்பூர் காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது அஷிப் (22). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அன்னூரில் இருந்து அவினாசி சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News