உள்ளூர் செய்திகள்

முத்தையாபுரம் பகுதி கடைகளில் பா.ஜ.க.வினர் வியாபாரி களிடம் மனுக்கள் பெற்ற காட்சி.


தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து வியாபாரிகளிடம் மனுக்கள் பெற்ற பா.ஜ.க.வினர்

Published On 2023-01-23 06:44 GMT   |   Update On 2023-01-23 06:44 GMT
  • தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமையில் பா.ஜ.க.வினர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மனுக்களை பெற்றனர்.
  • அந்த மனுவில் மின் அளவை மாதம் ஒரு முறை அளவிட மாநில அரசை வலியுறித்தியும் , மின்கட்டணத்தை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.

தூத்துக்குடி:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோச னையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா வர்த்தக பிரிவு சார்பாக வணிகர்களின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, வியாபாரிகளிடம் விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வர்த்தக பிரிவு மாநில செயலாளர் அசோக், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாவட்ட பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் கே.என்.ஆர்.பரமசி வன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம், முன்னிலையில், தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமையில் பா.ஜ.க.வினர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மனுக்களை பெற்றனர். அந்த மனுவில் மின் அளவை மாதம் ஒரு முறை அளவிட மாநில அரசை வலியுறித்தியும் , மின்கட்டணத்தை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த மனுவில் கடை உரிமையாளர்களிடம் பா.ஜ.க.வினர் கையொப்பம் வாங்கினர்.

நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மண்டல் தலைவர் மாரிராஜ்,வடக்கு மண்டல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மதிராஜன், பாலசேகர்,செல்லப்பன்,வீரமணி,பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானம், முத்துகிருஷ்ணன், அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் புனிதா, பொய்சொல்லான், செல்வம், சங்கர்கணேஷ், லெட்சுமி சிலம்பொழி, சோடா முருகேசன், ராஜ்குமார், புவனேஸ்வரன் கிளை தலைவர்கள் சுடலை, சவுந்தர்ராஜன், ராஜ கோபால், விக்னேஷ், சுரேஷ், புகழ் செந்தூர்பாண்டி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நடை பயணமாக சென்று வியாபாரிடம் மனுக்களை பெற்றனர்.

Tags:    

Similar News