உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

Published On 2023-03-07 09:39 GMT   |   Update On 2023-03-07 09:39 GMT
  • சங்கராபுரத்தை அடுத்த பாவளம் கிராமத்தை சேர்ந்த வர் சரத்குமார் (வயது 22). இவர் 17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்றார்
  • பதுங்கி இருந்த சரத்குமாரை போலீசார் மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரத்தை அடுத்த பாவளம் கிராமத்தை சேர்ந்த வர் சரத்குமார் (வயது 22). இவர் 17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்றார். இது குறித்து சிறுமியின் தந்தை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த சரத்குமாரை போலீசார் மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

Tags:    

Similar News