பூதலூரில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் முகாம்
- முகாமில், 3000-க்கும் மேற்பட்டோர் மின் இணைப்பை ஆதாருடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.
- வரும் வாரத்தில் விடுபட்டுள்ள கிராமங்களில் முகாம் நடைபெறும்.
பூதலூர்:
செங்கிப்பட்டி-பூதலூர் சாலையில் புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வழியாக மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் பூதலூர் வட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் நடைபெற்றது. இம்முகாமில் கிராம மக்கள் 3000-க்கும் மேற்பட்டோர் தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.
முகாமில் கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர்.ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்.குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அறிவுமணி, கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் கருப்பையா, பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவ, மாணவிகள் ஆகியோர் முகாம் சிறப்புற நடைபெற உதவி புரிந்தனர்.அனைத்து ஊர்களிலும் உள்ள பஞ்சாயத்து தலைவ ர்கள் முன்னிலையில் முகாம் தொடங்கிநடந்தது.
வரும் வாரத்திலும் விடுபட்டு உள்ள கிராமங்களில்முகாம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.