உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வாழைப்பழத்தை விழுங்கிய குழந்தை பரிதாப சாவு

Published On 2022-09-12 05:31 GMT   |   Update On 2022-09-12 05:31 GMT
  • 1½ வயது குழந்தை வாழைப்பழம் சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
  • ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் செல்லாண்டி யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது 1½ வயது மகன் நேற்று வீட்டில் வாழைப்பழம் சாப்பிட்டான்.

அப்போது திடீரென அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து தனது மகனை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அவரது பெற்றோர்கள் கொண்டு வந்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News