உள்ளூர் செய்திகள்

கோவை ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-01 09:08 GMT   |   Update On 2023-06-01 09:08 GMT
  • திருப்பணிகள் முடிந்து கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
  • ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் அறங்காவலராக எம்.மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை,

கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் அருகே செல்வவிநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது.

திருப்பணிகள் முடிந்து கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை முதலாம் கால பூஜையும், மாலையில் இரண்டாம் கால பூஜையும் நடந்தது. நேற்று நவக்கிரக ஹோமம், 4-ம் கால ஹோமங்கள், அஷ்டபந்தனம் நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. காலை 3.35 மணிக்கு 5-ம் கால ஹோமங்கள், 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 7.30 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து 7.45 மணிக்கு செல்வ விநாயகர், பாலமுருகர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8.30 மணிக்கு செல்வ விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கிடையே ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் அறங்காவலராக எம்.மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி மகேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்னை 108 விநாயகர் கோவில் அறங்காவலராக நியமனம் செய்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் கார்த்திக், கோவை மாவட்ட அறங்காவலர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

Tags:    

Similar News