உள்ளூர் செய்திகள்

ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கராஜ் பிணமாக கிடக்கும் காட்சி.

ரெயில் முன் பாய்ந்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

Published On 2022-08-17 09:02 GMT   |   Update On 2022-08-17 09:02 GMT
  • ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி இவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
  • தங்கராஜ் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 56) கட்டிட மேஸ்திரி. இவரிடம் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் (37) என்பவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர் அருகே உள்ள தனியார் நூற்பாலை அருகேயுள்ள ரெயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துக்கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது.

இதில் தலை துண்டித்த நிலையில் தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது பற்றி சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தங்கராஜ் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News