உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி

Published On 2023-03-21 09:44 GMT   |   Update On 2023-03-21 09:44 GMT
  • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீரை சேமிக்க திட்டம் நடைபெறுகிறது.
  • ரூ.10 லட்சம் மதீப்பிட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையாக முதன்மைத் தொழிலாக தேயிலை தொழில் நடைபெற்று வருகிறது. அதற்கு அடுத்த அடிப்படையாக மலை காய்கறிகள் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், அவரை, போன்ற எண்ணற்ற மலைக்காய்கறிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஆங்கில காய்கறிகளும் அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருவதால் தண்ணீரை சேமிக்க ஆங்காங்கே தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாய நிலங்களுக்கு அருகாமையில் தடுப்புச் சுவர்களும், விவசாயத்திற்கு ஏற்ப நீரோட்ட வசதிகளை செய்யும் வகையில் ரூ.10 லட்சம் மதீப்பிட்டில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி காவிலேரை பகுதியில் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News