கோவையில் சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
- கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- வாழ்க்கையில் விரக்தியடைந்த ஞானப்பிரகாஷ் கடந்த சில நாட்களாகவே யாருடனும் பேசாமல் இருந்து வந்தார்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்துரை அடுத்த சுகுணாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ்(39).
இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளி கடையில் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு இதே கடையில் வேலை செய்து வரும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பலமுறை ஞானப்பிரகாஷ் தனது மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால்
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை இவரது வீட்டின் உரிம யாளர், இவரை காண்பதற்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் ஞானபிரகாஷ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் பிளாரன்ஸ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஞானபிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.