உள்ளூர் செய்திகள்

பருத்தி ஏலம் நடந்தது.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

Published On 2023-08-13 09:18 GMT   |   Update On 2023-08-13 09:18 GMT
  • சராசரியாக 3 ஆயிரம் குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
  • சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 309-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்ப னைக்கூட கண்காணிப் பாளர் தாட்சாயினி தலைமையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1958 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 3000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

பருத்தியின் மதிப்பு சராசரியாக 2 கோடி ரூபாய் ஆகும்.

இதில்தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7551/- குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7199/- சராசரி மதிப்பு குவிண்டா லுக்கு ரூ.7309/- என்ற விலைக்கு கொ ள்முதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News