உள்ளூர் செய்திகள் (District)

கடலூர் மாவட்ட மீன்பிடி விசைப்படகுகளை மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு: கலெக்டர் பாலசுப்ரமணியம் தகவல்

Published On 2023-05-05 07:51 GMT   |   Update On 2023-05-05 07:51 GMT
  • கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • மீன்வளத் துறை அலுவலர்களால் கடலூர் மாவட்டத்தில் 17.05.2023-ந் தேதி வரை கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணி யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-


கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்து டன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மீன்பிடிப்பு தடைக்காலத்தில் தமிழ கத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதி தன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்று டன் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் மானிய விலையிலான எரி எண்ணை மற்றும் இதர மானியத் திட்டங்க ளுக்கு நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு 2023-ம் ஆண்டில் மீன்பிடி விசைப்படகுகளை வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீன்வளத் துறை அலுவலர்களால் கடலூர் மாவட்டத்தில் 17.05.2023-ந் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்ஆய்வின் போது, மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகினை பச்சை வர்ணம் பூசப்பட்டு படகின் பதிவு எண் தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும் . மேலும் ஆய்வின்போது படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் அதற்கான நகல்கள், தொலைதொடர்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிர் காப்பு மிதவை மற்றும் உயிர்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக்குழுவிடம் அவசியம் காண்பிக்கப்பட வேண்டும், ஆய்வுக்கு உட்படுத்த ப்படாத மீன்பிடி விசைப்ப டகுகளுக்கான மானிய விலையிலான எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கடலூர் மாவட்ட, விசைப்படகு உரிமையாளர்கள் அனை வரும் தங்களது பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத படகுகளை 17.05.2023 அன்று தவ றாமல் ஆய்வுக்குழுவிற்கு ஆய்வுக்குட்படுத்த வேண் டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News