உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2023-01-26 09:26 GMT   |   Update On 2023-01-26 09:26 GMT
  • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.
  • அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

தஞ்சாவூர் பூதலூர் காங்கேயர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 70). இவர், வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து முத்துகிருஷ்ணனின் மகன் செந்தில்குமார் (43) பூதலூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News