உள்ளூர் செய்திகள்

வடமாநில வாலிபர் சாவு

Published On 2022-06-16 09:23 GMT   |   Update On 2022-06-16 09:23 GMT
  • பெருந்துறையில் வடமாநில வாலிபருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
  • திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு:

ஒடிசா மாநிலம் சுபமபூர் பகுதியை சேர்ந்தவர் அண்டயாமி சாகு (21). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் வேலைக்காக வந்தார்.

அங்கு உறவினர் தங்கியிருந்த அறையில் தங்கி வேலை தேடி வந்தார். இந்நிலையில் அண்டயாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு நிலைமை மோசமானதால் அவரை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News