தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசின் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும்.
- கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும்.
தஞ்சாவூர்:
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டி உரிய நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும்.
மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசின் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் .
கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும்.
அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தத்தை கொடுத்து உரிய நீரை பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
அகில இந்திய இணை செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட பொருளாளர் பழனிஅய்யா, துணைத் தலைவர் முனியாண்டி , ஒன்றிய செயலாளர் ராம், ஒன்றிய தலைவர்கள் கருப்பையன், சௌந்தரராஜன், கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.