உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Published On 2022-07-24 06:51 GMT   |   Update On 2022-07-24 06:51 GMT
  • 1990ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசை மற்றும் இருக்கைகளை தான் படித்த பள்ளிகள் மற்றும் தனது முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரன் செயலராகவுள்ள மயிலாடுதுறை ஸ்ரீ குருஞா னசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வைத்திஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளிக்கும் வழங்கினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் 1990ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரிய ர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தருமையாதினம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமா ச்சாரிய சுவாமிகள் ஆசிர்வாதத்துடன் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளியின் செயலர், தலைமை ஆசிரியர் முன்னாள், இந்நாள் ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் செந்தில்ராஜ்குமார் அனைவரையும் வரவே–ற்றார்.

முன்னாள் ஆசிரி–யர்கள் அனைவருக்கும் மாணவர்களால்நினைவு ப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள். மேலும் ஆசிரியர்கள் முன்னாள் கல்லூரி முதல்வரும், ஆதீனத்தின் முன்னாள் பள்ளி கல்லூரி நிர்வாக செயலாளருமான திருநாவுக்கரசு, அகிலாண்டேஸ்வரி, ராஜாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவனத்தின் நிதித்துறை பொதுமேலாளர் செந்தில், ராஜ்குமார் ஆகியோர் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசை மற்றும் இருக்கைகளை தான் படித்த பள்ளிகள் மற்றும் தனது முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரன் செயலராகவுள்ள மயிலாடுதுறை ஸ்ரீ குருஞா னசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வைத்திஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளிக்கும் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் மாணவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News