உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் பெண் ஐ.டி.ஊழியரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி

Published On 2023-04-26 09:25 GMT   |   Update On 2023-04-26 09:25 GMT
  • மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார்.
  • கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார்.

கோவை,

கோவை கணபதி வரதராஜலு நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி(26).ஐ.டி.ஊழியர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார்.

அப்போது இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மெசேஜ் வந்தது. அதன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், யூடியூப் வீடியோவில் தங்களது நிறுவனம் பற்றி லைக் மற்றும் ஷேர் செய்தால் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பி புவனேஸ்வரி அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.5.60 லட்சம் அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் புவனேஸ்வரிக்கு அந்த நபர் கூறியபடி கமிஷன் தொகை மற்றும் வருமானம் கிடைக்கவில்லை.

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு என கூறி மர்ம நபர் புவனேஸ்வரியிடம் ரூ.5.60 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News