பாபநாசத்தில், இலவச கண் சிகிச்சை முகாம்
- முகாமில் 250 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார்.
உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ், சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம், முகாம் சேர்மன் கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவை திட்ட மாவட்ட தலைவர் வின்சென்ட் பிரபாகரன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நடைபெற்ற முகாமில் மருத்துவர்கள் சபீரா, பூஜா குழுவினர்கள் கலந்துகொண்டு சிறியவர் முதல் பெரியவர் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி கண்ணில் குறைபாடு உள்ள அனைவருக்கும் சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.
இம்முகாமில் 250 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். 25 பேர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர் ராஜ், சாமிநாதன், சரவணன், செந்தில் நாதன், பக்ருதீன் அலி அகமது, விவேகானந்தன், சுப்பிரமணியன், வெங்கடேசன், கஸ்தூரி கணேசன், ரவிச்சந்திரன், செல்வகுமார், சுரேஷ், முருகவேலு, கணேசன், மோகன் பாபு, முருகானந்தம், அப்துல் ஆசிப், முகமது சித்திக், அதியமான், தமிமுன் அன்சாரி, சதீஸ், சக்திவேல், ஆபிதீன் பள்ளி பொறுப்பு தாளாளர் சித்ரார்த்தன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பாபநாசம் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.