- எல்.ஜே.நகரில் உள்ள பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- 145 பேருக்கு எக்கோ, உடல் ரத்த அழுத்தம் மற்றும் பொது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமம் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டருடன் இணைந்து எல்.ஜே.நகரில் உள்ள நியூ விஷன் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.
இந்த முகாம் நடத்திட தமிழ் பல்கலை கழக வளாக குடியிருப்போர் நலசங்க தலைவர் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பாரதி நகரில் வசித்து வரும் முன்னாள் படைவீரர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இம்மருத்துவ முகாமில் 205 நபர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 145 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இ.சி.ஜி., பி.எம்.ஐ., பொது பரிசோதனைகளை ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் குழுவினர் செய்தனர்.
முடிவில் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ரெ.குருமூர்த்தி நன்றி கூறினார்.