உள்ளூர் செய்திகள்
ஊட்டி லோயர் பஜார் சாலையில் இரவு நேரங்களில் வீசப்படும் குப்பைகள்
சாலைகளில் குப்பைகளை வீசுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பாக தினம்தோறும் காலை,மாலையில் என நகராட்சி குப்பை வாகனங்களில் வந்து குப்ைப பெற்று செல்கின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் வாகனங்களில் எங்கெங்கிருந்தோ வந்து மூட்டை, மூட்டையாக குப்பைகளை தினம்தோறும் வீசி செல்கின்றனர்.
பிளாஸ்டிக் மற்றும் வாழை இலைகள் அதிகமாக காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மற்றும் இதுபோல் சாலைகளில் குப்பைகளை வீசுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.