உள்ளூர் செய்திகள்

கோவையில் குண்டர் சட்டத்தில் 20 பேர் கைது

Published On 2023-06-04 08:53 GMT   |   Update On 2023-06-04 08:53 GMT
  • பிரகாஷ் என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்
  • குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்கலாம்

கோவை,

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக, பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டார்.

இதன்படி பிரகாஷ் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் இதுவரை 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 7 பேர் கஞ்சா குற்றவாளிகள். எனவே கோவை மாவட்டத்தில் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை 9498181212, 77081 00100 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News