உள்ளூர் செய்திகள் (District)

காரைக்காலில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டியதால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

Published On 2022-08-17 07:18 GMT   |   Update On 2022-08-17 07:18 GMT
  • பெற்றோர்களுக்குரூபாய் 25 ஆயிரம் அபராதமும், 1நாள் சிறை தண்டனையும் அளித்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தனது வாகனத்தை வழங்க வேண்டாம்.

காரைக்கால்:

காரைக்கால் மாவட்ட போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் மறி கிருஷ்டியன் பால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 18 வயதிற்கு குறைவான சிறார்களுக்கு, தங்களது மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதியளித்த குற்றத்திற்காக 3 வ ழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனத்தின் பெற்றோர்களுக்குரூபாய் 25 ஆயிரம் அபராதமும், 1நாள் சிறை தண்டனையும் அளித்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை கவனத்தில் கொள்வதுடன், சிறார் ஏற்படுத்தும் வாகன விபத்திற்கு எவ்வித விபத்து காப்பீடும் கிடைக்காமல் அதற்கும் சிறாரின் பெற்றோர்(அ) உரிமையாளரே பொறுப்பாவர் என்பதையும் தெரியபடுத்தி, 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தனது வாகனத்தை வழங்க வேண்டாம் என்று போக்குவரத்து காவல் துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News