மயிலாடுதுறையில், உழவர் சந்தை 15 நாட்களில் புதுபொலிவுடன் இயக்கப்படும்- கலெக்டர் தகவல்
- உழவர் சந்தையில் 33 கடைகள் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கடை இலவசம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை உழவர் சந்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ. 28.06 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் மறுசீரமைக்கும் பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
மயிலாடுதுறை உழவர் சந்தையில் 33 கடைகள் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் புதிய கழிப்பறைகளும், புதிய பம்ப் செட் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.
மின்னும் எடை எந்திரம் வைக்கப்படும். டிஜிட்டல் விளம்பர பலகை வைக்கப்படும்.
இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யலாம்.
நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கடை இலவசம்.
மின்னும் எடை எந்திரம், (இலவச தராசு) போக்குவரத்து வசதி இலவசம், நல்ல விலை கிடைக்க நிர்ணயம் செய்து தரப்படும். இப்பணிகள் இன்னும் 15 நாட்களில் புது பொலிவுடன் உழவர் சந்தை இயக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், வேளாண்மை அலுவலர் கீர்த்திகா ஆகியோர் உடன் இருந்தனர்.