உள்ளூர் செய்திகள் (District)
தஞ்சையில், தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம்; 13 பேர் கைது
- ராமநாதபுரம் ஊராட்சி, அண்ணா நகர் பகுதி வார்டு எண்.3-ல் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் போஸ், திருச்சி மாவட்ட செயலாளர் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குயிலி பேரவை திண்டுக்கல் செயலாளர் நில செங்கொடி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி மன்றம் அண்ணா நகர் பகுதி வார்டு எண்.3-ல் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது கோரிக்கை களை வலியுறுத்தி அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.