உள்ளூர் செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளியில், பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-25 10:10 GMT   |   Update On 2022-12-25 10:10 GMT
  • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாத கண்டித்து ஆர்ப்பாட்டம்.
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

பூதலூர்:

பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாத கண்டித்தும், உடனடியாக பொங்கல் கரும்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தலைமைவகித்தார். விவசாய அணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் நக்கீரன், திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் பழனி பிரபா, திருச்சி புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக மாநில பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News