டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் அறிமுக நிகழ்ச்சி
- ஏக்கருக்கு ரூ.300 மானியத்தில் டிரோன் மூலம் மருந்து தெளித்து வாய்ப்பை வழங்கியுள்ளது.
- முன்னோடி விவசாயி முருகேசன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் அருகே உள்ள வாளமரக்கோட்டை கிராமத்தில் சின்ஜென்டா நிறுவனம் சார்பில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். வேளாண்மைதுறை அலுவல ர்கள் கண்ணன், தூயவன், பசுபதி, மௌலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சின்ஜென்டா வணிக மேலாளர் ராஜகோபால் கொடியசைத்து டிரோன் மூலம் பூச்சி மருத்து தெளிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசு ம்போது,விவசாயிகளின் நலன் கருதி சின்ஜென்டா நிறுவனம் உதவியுடன் ஏக்கருக்கு ரூ.300 மானியத்தில் டிரோன் மூலம் மருந்து தெளித்து வாய்ப்பை வழங்கியுள்ளது.
விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயி முருகேசன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் சின்ஜென்டா சரக மேலாளார் மணிவேல் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை சின்ஜென்டா களப்பணியாளர்கள் மற்றும் வேளாண்மைத் துறையினர் செய்திருந்தனர்.