உள்ளூர் செய்திகள்

கோவையில் ஐ.டி ஊழியர் தற்கொலை

Published On 2023-06-08 09:20 GMT   |   Update On 2023-06-08 09:20 GMT
  • பாலாஜி தனது வேலையின் சிரமத்தை பற்றி அடிக்கடி அவரது சகோதரியிடம் கூறி வந்தார்.
  • செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை செல்வபுரம் அருகே செட்டி வீதியை சேர்ந்தவர் லட்சுமிபிரியா (29). இவரது சகோதரர் பாலாஜி (வயது25). இவர்கள் இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் பாலாஜி தனது வேலையின் சிரமத்தை பற்றி அடிக்கடி அவரது சகோதரியிடம் கூறி வந்தார்.

மேலும் வாழ்கையில் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் அவரது தாயும், அவரது சகோதரியும் பாலாஜிக்கு ஆறுதல் கூறி வந்தனர். சம்பவத்தன்று பாலாஜி அவரது தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து சாப்பிட்டார். பின்னர் 3 பேரும் தூங்க சென்றனர்.

சிறிது நேரத்தில் லட்சுமிபிரியா எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் பாலாஜி இல்லாததை கண்டார். அவரை வேறொரு அறையில் தேடி பார்த்தபோது, அந்த அறை உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்த போது, பாலாஜி தூக்குப்போட்டு கொண்டதை கண்டு அதிச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News