உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
- யார் அவர்? என்று போலீசார் விசாரணை
- பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் கிடந்தார்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் பார் முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணமாக கிடந்த முதியவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதையடுத்து பிணமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இவரது பெயர் என்ன? எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.