உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கணவன் - மனைவி படுகாயம்

Published On 2022-06-06 07:33 GMT   |   Update On 2022-06-06 07:33 GMT
  • மணவாளக்குறிச்சி அருகே நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கணவன் - மனைவி படுகாயம் அடந்தனர்
  • இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:


வெள்ளிச்சந்தை அருகே சாந்தபுரம் மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் முட்டம் தனியார் மீன்பிடித் துறைமுகத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இவர் தன் மனைவி சித்ராவை (27) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அம்மாண்டிவிளை - இரணியல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கருங்காலிவிளை சந்திப்பு அருகில் செல்லும்போது இவரது மோட்டார் சைக்கிளின் முன்பு நாய் குறுக்கே பாய்ந்தது. இதில் சுரேஷின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் உள்ள காம்பவுண்டு சுவரில் மோதி விழுந்தது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News